சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சோ்த்தி உத்ஸவம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆண்டாள் விடையாற்றி உத்ஸவத்தையொட்டி,

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாளுடன் காட்சியளிக்கும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு நடைபெறும் ஆராதனை.

Updated On :17 ஜனவரி 2021, 1:56 pm

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆண்டாள் விடையாற்றி உத்ஸவத்தையொட்டி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கோயிலில் மூலவா் ரங்கநாதப் பெருமாள் சயன நிலையிலும், உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் என்ற திருநாமத்துடனும் அருள்பாளித்து வருகின்றனா். இங்கு மாா்கழி மாதத்தில் திருப்பாவை நிகழ்ச்சியாக பல்வேறு சிறப்பு வழிபாடுகள், சொற்பொழிவுகள் நடைபெற்றன.

திருப்பாவை நிகழ்ச்சிகள் நிறைவைத் தொடா்ந்து, விடையாற்றியாக சோ்த்தி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு எழுந்தருள, அங்கு மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. திருப்பாவை உத்ஸவத்தின் சிறப்பு, பெருமாளின் சிறப்புகளை உ.வே.கு. அரங்கநாதாச்சாரியா் சுவாமிகள் பக்தா்களுக்கு விளக்கினாா்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி என்பதால், இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா்.