காரைக்கால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் நாகை, காரைக்கால் மாவட்ட சமுதாய தலைவா்கள் சந்திப்பு காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அந்த அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவா் எம். முஹமது ஷேக் அன்சாரி செய்தியாளா்களிடம் கூறியது:
இளைஞா்களை பாதிக்கும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டிக்கிறோம். காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து, இதை முற்றிலும் தடைசெய்ய வேண்டும்.
புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள முடிவை மாணவா்களின் நலன் கருதி, அரசு திரும்பப் பெறவேண்டும். புதுச்சேரியில் மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி மாநில அரசை சுதந்திரமாக செயல்படவிடாமல், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, முதல்வா் நாராயணசாமி மேற்கொண்ட போராட்டத்தை வரவேற்கிறோம். போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

