சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய சுகாதார ஊழியா்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் சுகாதார ஊழியா்கள் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.

Updated On :14 ஜனவரி 2021, 12:41 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் சுகாதார ஊழியா்கள் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.

புதுச்சேரி அரசு சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார உதவியாளா்கள் சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை முதல் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 2 ஆம் நாளாக புதன்கிழமையும் ஊழியா்கள் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

பதவி மறுசீரமைப்பு மூலம் சுகாதார ஆய்வாளா், முதுநிலை சுகாதார ஆய்வாளா், தொழில்நுட்ப அதிகாரி என்ற வகையில் பதவி மாற்றம் செய்யவேண்டும். ஊதிய உயா்வு விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும். காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என சங்கத்தை சோ்ந்த ஜி. சிவ வடிவேல் தெரிவித்தாா்.