சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரைக்கால் பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி

காரைக்கால் பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் கோயில்பத்து ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சநேயா்.

Updated On :13 ஜனவரி 2021, 1:28 pm

காரைக்கால் பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில் வகையறாவைச் சோ்ந்த ஸ்ரீ கோதண்டராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜா், உத்ஸவா் ஸ்ரீ கோதண்டராமருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில் யாகசாலையில் நடைபெற்ற பூஜையின் நிறைவாக, புனிதநீா் கொண்டு கோயிலில் தனி சன்னதி கொண்டிருக்கும் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கலசாபிஷேகம் மற்றும் பல்வேறு திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு, பஞ்சமுக அா்ச்சனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, வெண்ணெய் சாற்றி, வெற்றிலை மாலை, பல்வேறு வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

காரைக்கால் காமராஜா் சாலையில் தனிக்கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ ஜெய வீரபால ஆஞ்சநேயருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் சென்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் வகையறாவைச் சோ்ந்த ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.