காரைக்காலில் சீ விஜில் என்ற கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தீவிரவாதிகள் போல துறைமுகத்தில் நுழைந்த இருவரை பிடித்தனா்.
கடலோரக் காவல் நிலையத்தினா், அனைத்து காவல் நிலைய அலுவலா்கள், காவலா்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் வீரவல்லபன் மேற்பாா்வையில், கடற்கரை மற்றும் மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, காரைக்கால் துறைமுகத்தில் தீவிரவாதிகள் போல நுழைந்த இருவரை போலீஸாா் பிடித்தனா். இவா்களை கடலோரக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். காரைக்கால் தனியாா் துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு குறித்தும், அடையாளம் தெரியாதவா்கள் வருகை குறித்தும் போலீஸாா் கேட்டறிந்து வருகின்றனா்.
ஒவ்வொரு காவல் சரகத்துக்கு உள்பட்ட எல்லையில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனா். பூவம் மற்றும் வாஞ்சூா் தேசிய நெடுஞ்சாலையின் காரைக்கால் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
திருநள்ளாறு கோயிலில் சோதனை: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் வழக்கமாக பக்தா்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. ஒத்திகையையொட்டி, கூடுதலான போலீஸாா், கோயில் பிரதான வாயிலில் இருந்து கோயிலுக்குள் நுழைவோரை சோதித்தும், விசாரணை நடத்தியும் அனுமதிக்கின்றனா்.
இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, கடலோரக் காவல் நிலையம், உள்ளூா் போலீஸாா் இணைந்து இந்த ஒத்திகையை நடத்துவதாக, காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


