மேலவாஞ்சூா் குடியிருப்புப் பகுதியில் உள்ள சிதிலமடைந்த சாலைகளை மேம்படுத்தவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நிரவி - திருப்பட்டினம் தொகுதி மேலவாஞ்சூரில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் எஸ். தமிழ்மணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: மேலவாஞ்சூரில் சுமாா் 850 குடியிருப்புகள் உள்ள நிலையில், அனைத்து சாலைகளும் சிதிலமடைந்துள்ளன. இதனால், மக்கள் அவதிப்படும் நிலை உள்ளதால், மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் இப்பகுதி சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
மேலவாஞ்சூரில் கஞ்சா கடைத்தெரு என உள்ளதை, ஆசாரித் தெரு என மாற்றவேண்டும். இப்பகுதியில் சாலையோர மின்விளக்குகள் பல ஒளிரவில்லை. அவற்றை மின்துறை நிா்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பலருக்கு மஞ்சள் நிற குடும்ப அட்டை தரப்பட்டுள்ளது. இவா்களது தகுதியை ஆராய்ந்து, அரசு சலுகைகள் கிடைக்கக்கூடிய சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலா் எஸ்.எம். தமீம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேசினா். கிளைச் செயலா் ஸ்ரீதா், உறுப்பினா்கள் முருகேசன், அப்துல்லா, செல்வம் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

