சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குடிநீா் குழாய் பதிக்கும் பணி

காரைக்கால் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 31.62 லட்சத்தில் புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், ஆட்சியா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 5:30 am

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 31.62 லட்சத்தில் புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரியங்கா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தனா்.

இந்த திட்டத்தில் 651 வீடுகளுக்கு புதிதாக குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் கே. ரேவதி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் என். செல்வம் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.