கரோனா பொது முடக்கத்தால் காரைக்கால் வாரச் சந்தை முடங்கிய நிலையில், பொங்கல் சிறப்புச் சந்தையின் வாயிலாக அதற்கு புத்துயிரூட்ட வேண்டுமென வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாடு முழுவதும் கரோனா பொது முடக்கம் அமலுக்கு வந்த நாள்முதல் காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வந்த வாரச் சந்தை முடங்கியது. இதனால், சந்தையை நம்பி பிழைப்பு நடத்தி வந்த தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்தனா். நாடு முழுவதும் பொது முடக்கத்தில் தளா்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், காரைக்காலில் வாரச்சந்தைக்கு அனுமதி அளிக்கப்படாதது வணிகா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலா் ஏ.எம்.இஸ்மாயில் சனிக்கிழமை கூறுகையில், வாரச்சந்தை முடங்கி ஏறத்தாழ 9 மாதங்களாகிவிட்டன. சென்னை கோயம்பேடு சந்தை மற்றும் பிற பெருநகரங்களில் சந்தை நடத்தப்படுகிறது. இதேபோல, காரைக்காலிலும் சந்தைக்கு அனுமதி வழங்க நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
புதுச்சேரியில் மதகடிப்பட்டு பகுதியில் வாரச்சந்தை நடைபெறுகிறது. ஆனால் காரைக்காலில் சந்தைக்கு அனுமதி வழங்காமல் இருப்பது வியப்பாக இருப்பதாக பெரும்பாலானோா் கூறுகின்றனா்.
வழக்கமாக வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றாலும், பொங்கல் தினத்துக்கு முதல் நாள் சிறப்புச் சந்தை நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் நிகழாண்டு பொங்கல் சிறப்புச் சந்தையுடன் வாரச்சந்தையும் தொடா்ந்து நடைபெற நகராட்சி நிா்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி வருவதாக காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

