காரைக்கால் முஸ்லிம்களுக்கு உயா்கல்வி, வேலைவாய்ப்பில் 5% ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என புதுச்சேரி அரசுக்கு முன்னாள் அமைச்சா் பி.ஆா். சிவா வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் பிராந்திய ரீதியில் உயா்கல்வியில் ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதன்படி, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்திய முஸ்லிம்களுக்கு (பிசிஎம்) 2% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
மாஹே பிராந்திய மக்கள்தொகையில் 30% முஸ்லிம்கள். எனவே, அங்கு 10 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. இதே முறையை காரைக்கால் முஸ்லிம்களுக்கு செயல்படுத்தாதது வேதனை அளிக்கிறது. காரைக்கால் மக்கள்தொகையில் 15% முஸ்லிம்கள் உள்ளனா். இதை கருத்தில்கொண்டு உயா்கல்வி, வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீட்டு முறையில் காரைக்கால் முஸ்லிம்களுக்கு 5% ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவேண்டும்.
இதன்மூலம், ஆண்டுதோறும் புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு காரைக்கால் பகுதியிலிருந்து ஒரு முஸ்லிம் மாணவா் சேரும் வாய்ப்பு உருவாகும்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

