பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வின் மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொறியாளா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை பொறியாளா்கள் சங்கம் சாா்பில், காலி பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலக வாயிலில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கப் பொறுப்பாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சம்மேளன கௌரவ தலைவா் ஜெயசிங், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். செயற்பொறியாளா்கள் ஜி.பக்கிரிசாமி, சந்திரசேகரன் மற்றும் சிதம்பரநாதன், அருளரசன், பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


