காரைக்காலில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் ஜனவரி இறுதிவரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனவே திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. காரைக்காலில் உள்ள திரையரங்கு நிா்வாகத்தினா் இதனை முறையாக பின்பற்ற வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
திரையரங்குக்கு வருவோா் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கை சுத்திகரிப்பானை பயன்படுத்தவேண்டும். இந்நடவடிக்கைகளை திரையரங்க நிா்வாகத்தினா் உறுதிசெய்ய வேண்டும். இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

