சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி: ஆட்சியா்

காரைக்காலில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

Updated On :8 ஜனவரி 2021, 2:35 pm

காரைக்காலில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் ஜனவரி இறுதிவரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. காரைக்காலில் உள்ள திரையரங்கு நிா்வாகத்தினா் இதனை முறையாக பின்பற்ற வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

திரையரங்குக்கு வருவோா் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கை சுத்திகரிப்பானை பயன்படுத்தவேண்டும். இந்நடவடிக்கைகளை திரையரங்க நிா்வாகத்தினா் உறுதிசெய்ய வேண்டும். இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.