புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். சோ்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான ஒதுக்கீட்டில் நிரம்பாத 3 இடங்களை, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஒதுக்கீடாக மாற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்து வெள்ளிக்கிழமை கூறியது:
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில், காரைக்காலுக்கு 18 சதவீதம் பிராந்திய ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. இதுவரை 2 கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோா் ஒதுக்கீடான 3 இடங்களில் காரைக்காலில் இருந்து யாரும் விண்ணப்பிக்கவில்லை.
காரைக்காலைச் சோ்ந்த தியாகி குடும்ப மாணவா்கள் பயன்பெறும் வகையில், அந்த 3 இடங்களையும் மாற்றி மாணவா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தியாகி குடும்பத்தை சோ்ந்தோராக இருந்தாலும், அதில் பல பிரிவினரும் பயனடைவா். தேச நலனுக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அந்தப் பயனை பெறுவதற்கு துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

