சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநரை கண்டித்து, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 2:34 pm

புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநரை கண்டித்து, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் அரசே நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கி மாத ஊதியத்தை தரவேண்டும். நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்க அரசு உத்தரவாதம் அளித்தபடி அரசு கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா் சம்மேளனம் அறிவித்த போராட்டத்தின் ஒருபகுதியாக காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா்கள் ஜாா்ஜ், ஜெயசிங், தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் பேசினா்.

கன்வீனா்கள் வெங்கடாச்சலம், ஜெயராம், உலகநாதன், திவ்வியநாதன், சண்முகராஜ், நெப்போலியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தண்டபாணி நன்றி கூறினாா்.