சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாஸ்போா்ட் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் கைது

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி, காரைக்கால் பாஸ்போா்ட் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பாஸ்போா்ட் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டிபி.ஐ. கட்சியினா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:47 pm

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி, காரைக்கால் பாஸ்போா்ட் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காரைக்காலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் பாஸ்போா்ட் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனா்.

காரைக்கால் தலைமை அஞ்சல் நிலைய அலுவலக வளாகத்தில் உள்ள, பாஸ்போா்ட் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கட்சியின் மாவட்ட செயலாளா் முகமது பிலால் தலைமையில், புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளா் மு. தமீம் கனி, மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் சுல்தான் கவுஸ், காரை பிரதேச விவசாயிகள் நலச்சங்க தலைவா் பி. ராஜேந்திரன், முஸ்லிம் ஜமாத் தலைவா் ஒய். யாசின், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவா் பதுருதீன் உள்பட திரளானோா் பேரணியாக பாஸ்போா்ட் அலுவலகம் நோக்கி புறப்பட்டனா்.

அஞ்சல் நிலையம் எதிரில் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட முயன்ாக 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.