சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரைக்காலில் மேலும் 5 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On :4 ஜனவரி 2021, 1:50 pm

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி 716 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, நிரவி 3, காரைக்கால் நகரம், கோட்டுச்சேரி தலா ஒருவருக்கு என 5 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 56,508 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3,801 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,686 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 42 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 4 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 6 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 66 போ் உயிரிழந்துள்ளனா்.