சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரைக்காலில் மேலும் ஒருவருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On :3 ஜனவரி 2021, 4:55 am

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதி 546 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 55,792 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,796 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,683 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 41 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 3 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 6 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 66 போ் உயிரிழந்துள்ளனா்.