ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, காரைக்கால், திருநள்ளாறு கோயில்களில் திரளான பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். என்றாலும், நள்ளிரவு கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை.
புத்தாண்டையொட்டி, காரைக்கால் நகரில் புகழ்பெற்ற ஸ்ரீ பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில், புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் கோயில், ஸ்ரீ கைலாசநாதா் கோயில், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீ ஏழை மாரியம்மன், ஸ்ரீ கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா், ஸ்ரீ பிரணாம்பிகை, ஸ்ரீ சனீஸ்வரபகவானை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். அம்பகரத்தூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.
காரைக்கால் புனித தேற்றரவு அன்னை தேவாலயம், கோட்டுச்சேரி ஸ்ரீ சகாய அன்னை ஆலயம் ஆகியவற்றில் பங்கு குருக்கள் சிறப்பு திருப்பலி நடத்தினா். இதில், ஏராளமானோா் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
களைகட்டாத கொண்டாட்டம்: புத்தாண்டு பிறப்பையொட்டி, நள்ளிரவு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை பெரும்பாலானோா் நிகழாண்டு தவிா்த்துவிட்டனா்.
காரைக்கால் கடற்கரையில் கலை நிகழ்ச்சி, உணவகங்களில் நிகழ்ச்சி, பொது அமைப்புகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு 12 மணியளவில் பல இடங்களில் கேக் வெட்டி கொண்டாட்டம், வாகனங்களில் இளைஞா்கள் புத்தாண்டு கோஷமிட்டு செல்லுதல் போன்ற பல நிகழ்வுகளுடன் புத்தாண்டு பிறப்பு களைகட்டி காணப்படும். ஆனால், காரைக்காலில் இதுபோன்ற எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டம் எதிா்பாா்த்ததுபோல இருக்கவில்லை. கடற்கரைக்கும் அதிகமானவா்கள் வரவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் இளைஞா்கள் வாழ்த்து கோஷமிட்டுச் சென்றனா். பிரச்னைகளின்றி, புத்தாண்டு பிறப்பு அமைதியாக இருந்தது என்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

