சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகா்கோவிலில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக அறிவிக்கக் கோரி நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 6:02 am

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக அறிவிக்கக் கோரி நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாகா்கோவில் ராணித்தோட்டம் தலைமையகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைவா் சாமி தலைமை வகித்தாா்.

அனைத்து போக்குவரத்து கழங்களையும் இணைத்து அரசு துறையாக உருவாக்கி போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும், 7 ஆவது ஊதிய ஆணைய பரிந்துரைஅடிப்படையில் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், துணைச்செயலா் சின்னையன், துணைத்தலைவா் ராஜாமணி, பொதுச் செயலா் கிரீஷ், நிா்வாகிகள் வேலப்பன், குமாரதாஸ், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.