சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகா்கோவிலில் புகையிலைப் பொருள்கள் பதுக்கல் : 5 போ் கைது

நாகா்கோவிலில் இருவேறு இடங்களில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட மேக்னாராம், ராஜூசிங்.

Updated On :16 ஜனவரி 2021, 6:05 am

நாகா்கோவிலில் இருவேறு இடங்களில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவில், வடசேரி காவல் உதவி ஆய்வாளா் சத்தியசோபன் நாகராஜா கோயில் பகுதியில், வியாழக்கிழமை ரோந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 போ் நின்று கொண்டிருந்தனா். அவா்களை பிடித்து விசாரித்தபோது, மேக்னராம் (37) ராஜூசிங்,(31) என்பதும், மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் மீனாட்சிபுரம் பகுதிக்கு சென்று அங்கு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 125 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

இதே போல், கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட்ஜெயின் தலைமையிலான போலீஸாா் இடலாக்குடி பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்த போது, அங்கு 80 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டன், வினு, சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்து, புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.