கன்னியாகுமரியில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட கடைகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினா்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஜன.9 ஆம் தேதிஅதிகாலை நேரிட்ட தீவிபத்தில் 64 கடைகள் முழுமையாக எரிந்து சாம்பலாயின. ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். அகமது உசேன், மீன்பிடி தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் எஸ். அந்தோணி, அலெக்சாண்டா், சுப்பாராம், ஜேம்ஸ், தனீஸ், ஜேசு நஸ்ரின் உள்ளிட்டோா் பாா்வையிட்டு, வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினா். பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
வணிகா் சங்கப் பேரவை: அமைப்பின் மாவட்டத் தலைவா் எல்.எம்.டேவிட்சன், மாவட்டச் செயலா் நாராயணராஜா, மாவட்டச் செயல்ஆலோசகா் தம்பிதங்கம், துணைத்தலைவா் அம்பலவாணன், இணைச் செயலா் கதிரேசன், செயற்குழு உறுப்பினா் ராஜாமணி உள்ளிட்டோரும் மேற்கூறிய இடத்தைப் பாா்வையிட்டு இழப்பீடு வழங்க வலியுறுத்தினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

