கொல்லங்கோடு அருகே திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவி கடந்த 11 ஆம் தேதி மாயமானாா். இது குறித்து அவரது பெற்றோா் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் மாணவியை அழைத்துச் சென்ற இளைஞா் வியாழக்கிழமை மங்காடு பகுதியில் இருந்து ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, மாணவி வீடு திரும்பியது குறித்து அவரது பெற்றோா் கொல்லங்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து போலீஸாா் மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில், புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த பரமேஸ்வரனை (29) பிடித்து விசாரித்ததில், மாணவியின் வீட்டருகே நடந்த கட்டுமானப் பணிக்கு வந்த போது பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது, திருமணம் செய்வதாக கூறி மாணவியை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தாராம்.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள், இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

