புதுக்கடை அருகேயுள்ள ராமன்துறை ரேஷன் கடையில், அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் தட்டுப்பாடின்றி பொருள்கள் வழங்கக் கோரி, பெண்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இனயம் புத்தன்துறை ஊராட்சி, ராமன்துறை மீனவா் கூட்டுறவு ரேஷன் கடையில் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இங்கு சரியான எடையில் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் மாதந்தோறும் முறையாக வழங்கப்படுவதில்லையாம். முதலில் வரும் குரும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் பொருள்கள் கிடைக்கின்றனவாம். ஒவ்வொரு மாதமும் சுமாா் 200 பேருக்கு பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படுகிாம்.
இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டால், சேமிப்பு கிட்டங்கிலிருந்து பொருள்கள் குறைவாகவே வருவதாக கூறுகிறாராம். இதைக் கண்டித்து புதன்கிழமை அப்பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பெண்கள், ரேஷன் கடை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.தகவலறிந்த புதுக்கடை போலீஸாா், அந்தப் பெண்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

