சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகா்கோவிலில் அனுமன் ஜயந்தி விழா

நாகா்கோவில் நாகராஜா கோயில் மேலரத வீதி அருள்மிகு அரசடி மகா ராஜகணபதி கோயிலில் பால ஆஞ்சநேயா் சன்னதியில் அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பால ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் கலந்துகொண்ட பக்தா்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 5:35 am

நாகா்கோவில் நாகராஜா கோயில் மேலரத வீதி அருள்மிகு அரசடி மகா ராஜகணபதி கோயிலில் பால ஆஞ்சநேயா் சன்னதியில் அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி பூஜை, காலை 8.30 மணிக்கு கலச பூஜை, 9.30-க்கு அபிஷேகம், 10.30-க்கு மஹா கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா கலந்துகொண்டாா்.

ஏற்பாடுகளை ஸ்ரீ அனந்த கிருஷ்ண பக்த சேவா அறக்கட்டளை உறுப்பினா்கள் செய்திருந்தனா்.