பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை புதன்கிழமை கடுமையாக உயா்ந்துள்ளது.
தோவாளை பூச்சந்தையில் வழக்கத்தைவிட அதிகமாக பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. எனினும், பிச்சி, மல்லிகைப் பூக்களின் வரத்து குறைவால் அவற்றின் விலை அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை ரூ.1,500 க்கு விற்கப்பட்ட மல்லிகை ரூ.2,500 ஆகவும், பிச்சிப்பூ ரூ.1,100இல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயா்ந்தது. கேந்தி ரூ.70, சேலம் அரளி ரூ.250, ரோஜா ரூ.220, சம்பங்கி ரூ.125, கொழுந்து ரூ.125, வாடாமல்லி ரூ.100, கோழிப்பூ ரூ.50 என விற்கப்பட்டது.
இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறுகையில், பனிப்பொழிவாலும், மழையாலும் பூக்களின் உற்பத்தி குறைந்து விலையேற்றம் உள்ளது. தை மாதத்தில் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

