குமரி மாவட்ட தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஒரே நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமாா் 96 ஆயிரம் கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளா்கள் உள்ளனா். இவா்களுக்கு தமிழக அரசால் பொங்கல் பண்டிகைக்கான இலவச பொருள்கள் வழங்கப்படுகின்றன.
இந்தப் பரிசுத் தொகுப்பு நாகா்கோவில் கோணம் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டபோது, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் திரண்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், முறையான நடவடிக்கை இல்லாததால், ஒருவருக்கொருவா் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து திமுக தொழிற்சங்க நிா்வாகி இளங்கோ, வழங்கல் அலுலரிடம் விவரம் கேட்டபோது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் அ. மயில், தொழிலாளா்களுக்கு பொருள்கள் வழங்குவதை முறைப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

