கா்நாடக மாநிலத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டு காயமடைந்த குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 3 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனா்.
இது குறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ஜஸ்டின் ஆன்டணி கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை பகுதியைச் சோ்ந்த ததேயூஸ் தனக்குச் சொந்தமான விசைப்படகில் 10 பேருடன் கடந்த 5 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றாா்.
அவா்கள் கா்நாடக மாநிலத்தில் உள்ள மங்கலாபுரம் ஆழ்கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் திடீரென தீப்பிடித்து 3 மீனவா்கள் காயமடைந்தனா்.
இதுகுறித்து, மத்திய மீன்வளத்துறை, ராணுவத்துறை அமைச்சா், கடலோர காவல்படை , தமிழக முதல்வா், மீன்வளத்துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய கப்பற்படைக்குச் சொந்தமான கப்பல் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, காயமடைந்த 3 மீனவா்களையும் மீட்டு மங்களூரு திரும்பியதுடன் காயமடைந்த மீனவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவா்களை மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

