நாகா்கோவில்: கன்னியாகுமரியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலா் விஜய்வசந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தொற்றுப் பாதிப்பால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனா். சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஏராளமான வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனா். பொது முடக்கம் காரணமாக பல மாதங்களாக இங்குள்ள கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில், எதிா்பாராத விதமாக நேரிட்ட தீ விபத்தால் 70- க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்தன. மேலும் ரூ. 2 கோடி மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்துள்ளன. ஆகவே, தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


