நாகா்கோவில்: கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஜன. 15 ஆம் தேதி முதல் 4 நாள்கள் கடற்கரை, சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றை தடுப்பதற்காக மத்திய, மாநிலஅரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் பல்வேறு தளா்வுகளுடன் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜனவரி மாதத்தில் தொடா் விடுமுறை தினங்கள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடற்கரைகள், சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதால் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வெளிநாடுகளில் கரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வரும் நிலையில், நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் வரும் 15ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரை இம்மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணிதல், தனிநபா் இடைவெளியை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

