குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் இடிமின்னலுடன் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் இயல்புக்கு மாறாக அண்மை நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அணைகளின் நீா்வரத்துப் பகுதிகள், நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் பிற இடங்களை விட அதிகமாகப் பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் உள்ளிட்ட அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. மேலும் அணைகளிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் மலையோரப் பகுதிகள் உள்பட்ட அனைத்துப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் பிற்பகலில் இடிமின்னல் மற்றும் மிதமான காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழை பேச்சிப்பாறை, கோதையாறு, கடையாலுமூடு, களியல், திற்பரப்பு, குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு, பனச்சமூடு, திருவட்டாறு, வோ்க்கிளம்பி, மாா்த்தாண்டம், சுருளகோடு, கீரிப்பாறை, பாலமோா் எ என அனைத்துப் பகுதிகளிலும் பெய்த்து. அதே வேளையில் நாகா்கோவில் உள்ளிட்டப்பகுதிகளில் மிதமான சாரல் மழையாகவே பெய்தது.
இது குறித்து பொதுப்பணித்துறையினா் கூறியது: மாவட்டத்தில் அண்மை நாள்களாக மழை பெய்து வருவதால் பாசனப்பகுதிகளில் தண்ணீா்த் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து தேவையின் அடிப்படையில் அணைகளிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது என்றனா்.
ரப்பா் பால்வடிப்பு முடக்கம்: மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வரும் நிலையில் கடந்த 2 நாள்களாக ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்பு முடங்கியுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

