களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போது பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் படத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை பயங்கரவாதிகள் இருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபீக் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரையும் போலீஸாா் ஏற்கனவே கைது செய்துள்ளனா்.
இந்த நிலையில் எஸ்.எஸ்.ஐ. வில்சனின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன், களியக்காவிளை காவல் நிலையத்துக்கு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்துக்கு மலா் வளையம் வைத்தும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினாா். அவருடன் தக்கலை துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


