சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மலைப் பகுதிகளில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் மழை நீடிக்கும் நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.

News image

திற்பரப்பு அருவியில் வியாழக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :8 ஜனவரி 2021, 1:06 pm

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் மழை நீடிக்கும் நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று மலையோரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, திற்பரப்பு அருவிக்கு தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. அருவியில் வியாழக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து மகிழ்ந்தனா்.

பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி தண்ணீரும், சிற்றாறு அணையிலிருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீரும் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.