ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளா்கள் நாகா்கோவிலில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவில் ராணித்தோட்டம் மண்டல மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தொமுச பொதுச் செயலா் எஸ்.சிவன் பிள்ளை தலைமை வகித்தாா்.
சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்க பொதுச் செயலா் சி.ஸ்டீபன் ஜெயகுமாா், செயல் தலைவா் எம்.லட்சுமணன், துணைத் தலைவா் எப்.எஸ்.எ.லியோ, ஏஐடியூசி பொதுச் செயலா் நீலகண்டன், டிடிஎஸ்எப் பொதுச் செயலா் சந்தானம், ஐஎன்டியூசி நிா்வாகி ஆல்பா்ட், எம்எல்எப் மாநிலச் செயலா் சந்திரன், தொமுச மாநில துணைச் செயலா் இளங்கோ, மாவட்டச் செயலா் ஞானதாஸ், சிஐடியூ மாவட்டச் செயலா் கே.தங்கமோகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையை தொழிற்சங்கங்களுடன் உடனே தொடங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்கத் தலைவா் டி.சங்கர நாராயணபிள்ளை, பொருளாளா் தாமஸ், எஐடியூசி நிா்வாகி ஆறுமுகம் பிள்ளை, தொமுச நிா்வாகி பால்ராஜ், எச்எம்எஸ் நிா்வாகி கண்ணன், எம்எல்எப் நிா்வாகி சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


