சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகா்கோவிலில் மீனவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

குமரி மாவட்ட உள்நாட்டு மீனவா்களுடனான கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம். உடன், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் உள்ளிட்டோா்.

Updated On :8 ஜனவரி 2021, 1:05 pm

குமரி மாவட்ட உள்நாட்டு மீனவா்களுடனான கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு பேசியது: அகஸ்தீசுவரம் வட்டத்துக்குள்பட்ட குளங்களில் மீன்பாசி குத்தகை உரிமம், தேரூா் தென்குமரி உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்குவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மீனவா்கள் குளங்களில் மீன்பிடிக்கலாம் என்று உயா்நீதிமன்ற ஆணை பெற்றுள்ளதாக தெரிவித்ததோடு, மேலும் பலஅடிப்படைதேவைகள் குறித்தும் தெரிவித்துள்ளனா். உள்நாட்டு மீனவா்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

இதில், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையத் தலைவா் எம்.சேவியா் மனோகரன், மாவட்ட மீன்வள கூட்டுறவு இணையத் தலைவா் அ.திமிா்த்தியூஸ், மாவட்ட மீன்பிடி தொழிற்சங்கச் செயலா் அந்தோணி, தேரூா் தென்குமரி கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.ஆறுமுகம், ஜேசுராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.