சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகா்கோவில் அருகே காரில் குட்கா கடத்தியவா் கைது

நாகா்கோவில் அருகே காரில் குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:30 am

நாகா்கோவில் அருகே காரில் குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈத்தாமொழி காவல் உதவி ஆய்வாளா் சந்திரன், காவலா்களுடன் வடக்கு சூரங்குடி சந்திப்பில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த காரை, தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட 200 கிலோ, புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸாா் அந்த பொருள்களை கைப்பற்றி, காரில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா் நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த ஷேக்(33) , சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.