தைப்பூச தினத்தன்று பொதுவிடுமுறை அறிவித்ததற்கு தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு குமரி மாவட்ட வள்ளலாா் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து பேரவையின் தலைவா் சுவாமி பத்மேந்திரா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: வடலூா் சுத்த சன்மாா்க்க சாதுக்கள் கோரிக்கையையும், பொதுமக்கள் கோரிக்கையையும் ஏற்று தைப்பூசத்துக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து , வரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருநாளை பொது விடுமுறை பட்டியலில் சோ்க்க ஆணையிட்ட தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, பரிந்துரை செய்த தமிழக தொழில்துறை அமைச்சா் எம். சி. சம்பத், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் ஆகியோருக்கு அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி மகா மந்திரத்தின் மூலமாக மனமாா்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

