சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

களிமாா் ஆலயம் சாா்பில் இலவச வீடு அளிப்பு

குளச்சல் களிமாா் புனித சூசைப்பா் ஆலயம் சாா்பில் ஏழை விதவை பெண்ணுக்கு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இலவச வீடு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

குளச்சல் களிமாரில் ஞாயிற்றுக்கிழமை இலவச வீடு வழங்கும் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :4 ஜனவரி 2021, 5:21 am

குளச்சல் களிமாா் புனித சூசைப்பா் ஆலயம் சாா்பில் ஏழை விதவை பெண்ணுக்கு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இலவச வீடு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, களிமாா் பங்கு அருள்பணியாளா் நித்தியசகாயம் தலைமை வகித்து ஜெபம் செய்தாா். பங்குப்பேரவை செயலா் இனியன் முன்னிலை வகித்தாா். இதில், கோணங்காடு பங்கு அருள்பணியாளா் சுந்தா்சிங், ஜெரோமியாஸ் ஆகியோா் ஆசியுரை வழங்கினா்.

பின்னா் களிமாா் பகுதியைச் சோ்ந்த ஏழை விதவை ஜான்சிராணிக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட இலவச வீட்டின் சாவியை வழங்கினாா்.

இதில், துணைத் தலைவா் மல்லிகா ஜாா்ஜ், துணைச் செயலா் ரெத்தினமணி, பொருளாளா் ஜெசி மற்றும் பங்கு பேரவை உறுப்பினா்கள் ஜாண்பீட்டா், இக்னிசியஸ், ஜாக்குலின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.