கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக வெள்ளிக்கிழமை மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சின்னமுட்டம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கன்னியாகுமரி கடல் பகுதியில் வியாழக்கிழமை காலை முதலே காற்றின் வேகம் அதிகரித்ததை அடுத்து, அலைகள் உயரமாக எழும்பின. இருப்பினும் விவேகானந்தா் பாறைக்கு மட்டும் படகுப் போக்குவரத்து இயக்கப்பட்டது. இந்நிலையில், இரவில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் சுமாா் 10 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின.
புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், புத்தாண்டு கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் படகுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மட்டுமன்றி சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, கோவளம், மணக்குடி, வாவத்துறை, புதுகிராமம், சிலுவைநகா் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதன் காரணமாக 10 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. 350- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளம் மற்றும் கட்டுமரங்கள் அந்தந்த கிராம கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

