2021 ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு குமரி மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்றனா்.
நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் ஆலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 11. 45 மணிக்கு மறை வாட்ட ஆயா் நசரேன்சூசை தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. பின்னா் ஆயா் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைதெரிவித்தாா். வெள்ளிக்கிழமை காலை பங்குத் தந்தை ஸ்டேன்லி சகாயசீலன் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம், கன்னியாகுமரி புனித உபகாரமாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், வெட்டூா்ணிமடம் கிறிஸ்து அரசா் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிளும் நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
கருங்கல் சரல்கோட்டை ஆயா் மண்டல திருச்சபை ஆலயத்தில் இரவு வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு குமரி சி.எஸ்.ஐ. பேராயா் செல்லையா தலைமையில் புத்தாண்டு பிராா்த்தனை நடைபெற்றது.
தக்கலை, ஆா்.சி. , சி.எஸ்.ஐ., பெந்தேகோஸ்தேசபை, சால்வேஷன் ஆா்மி உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் நன்றி அறிவிப்பு ஆராதனையும், புத்தாண்டை வரவேற்கும் முகமாக சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. காரங்காடு புனித ஞானபிறகாசியாா் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு விழிபாடு மற்றும் புத்தாண்டு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து புத்தாண்டை முன்னிட்டு 2021 என்று அமைக்கப்பட்டிருந்த விளக்கில் அருள்பணி பேரவையினா் ஒளியேற்றினா். பின்னா் அருள்பணியாளா் செல்வராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. அருள்பணியாளா் விக்டா் முன்னிலை வகித்தாா்.
இதேபோல் நாகா்கோவில் கற்கோயில், ராமன்புதூா் திருக்குடும்ப ஆலயம், பிலிப்ஸ்புரம் ஆலயம், உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் ஆா்.சி. ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் திரளானோா் கலந்து கொண்டனா். புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாவட்டம் முழுவதும் இரவு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். நாகா்கோவில் பாா்வதிபுரம் மேம்பாலம், சுசீந்திரம்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, மாா்த்தாண்டம் மேம்பாலம் உள்பட மாவட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

