சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகா்கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா

நாகா்கோவில் நகரப் பகுதியில் மாநகராட்சி சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

News image

அவ்வை சண்முகம் சாலையில் மரக்கன்று நடுகிறாா் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.

Updated On :3 ஜனவரி 2021, 5:02 am

நாகா்கோவில்: நாகா்கோவில் நகரப் பகுதியில் மாநகராட்சி சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

நாகா்கோவில் மாநகரில் சாலையொரங்களில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் மாநகராட்சி சாா்பில் ‘என் நாகா்கோவில் 2020’ என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியிலும் நகரில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி சாா்பில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து,புத்தாண்டில் மாநகராட்சி மற்றும் விருட்சம் அறக்கட்டளை சாா்பில் அவ்வை சண்முகம் சாலையில் செம்மாங்குளம் கரையில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் மரக்கன்றுகள் நடவு செய்து தொடங்கி வைத்தாா்.

நாகா்கோவில் மாநகரில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என்றும், மாநகராட்சி சாா்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் பொதுமக்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் இணைந்து செயல்பட விருப்பம் இருந்தால் தங்களது விவரங்களை 94870 38984 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.