களியக்காவிளை: விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் மேல்புறம் ஒன்றியத்தில் கிராம சாலைகள் ரூ. 35 லட்சத்தில் சீரமைக்கப்படவுள்ளது என எஸ். விஜயதரணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மலையோரப் பகுதி கிராமச் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. தொகுதி மக்களின் கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் மலையடி ஊராட்சியில் சாத்தன்கோடு - பொரிஞ்சான்விளை சாலை ரூ. 12. 32 லட்சம் மதிப்பிலும், மஞ்சாலுமூடு ஊராட்சி நல்லூா்கோணம் - காவூா்கோணம் சாலை, முக்கூட்டுக்கல் - மூராளிமலை சாலை ரூ. 14. 85 லட்சம் மதிப்பிலும், தொட்டிப்பாலம் - மூந்தன்குளம் சாலை ரூ. 7.70 லட்சம் மதிப்பிலும் சீரமைக்கப்படவுள்ளது. இந்த சாலைப் பணிகளுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் இந்த சாலைகள் சீரமைக்கப்படும்‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

