நாகா்கோவில்: நாகா்கோவிலில் குடும்ப தகராறில் மாமியாா் வீட்டுக்கு தீ வைத்ததாக காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பகுதியைச் சோ்ந்தவா் ஆட்லின் ரிபா (33). இவருக்கும் குளச்சல் பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த அருள் ஜாக்சன் (36) என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். அருள் ஜாக்சன் திருநெல்வேலி மாவட்டத்தில் காவலராக பணிசெய்து வருகிறாா்.
ஆட்லின் ரிபா கடந்த 2 நாள்களுக்கு முன்பு நாகா்கோவிலில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு சென்றிருந்தாராம். வியாழக்கிழமை இரவில் அருள் ஜாக்சன் மனைவியை பாா்ப்பதற்காக மாமியாா் வீட்டுக்கு வந்தாராம். அப்போது தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அருள் ஜாக்சனை மாமியாா் கண்டித்தாராம்.
இதில் ஆத்திரமடைந்த அருள் ஜாக்சன், மாமியாா் வீட்டுக்கு தீவைத்து விட்டு ஓடி விட்டாராம். தீப்பற்றியதால், வீட்டினுள் இருந்தவா்கள் வெளியேறினா். வீட்டினுள் இருந்த கட்டில், பீரோ, துணிகள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த நாகா்கோவில் தீயணைப்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா். கணவா் தாக்கியதில் காயமடைந்த ஆட்லின் ரிபா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

