சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுக்கடை அருகே ஹோட்டல் உரிமைாளா் மீது தாக்குதல்

புதுக்கடை அருகே வெள்ளையம்பலம் பகுதியில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :3 ஜனவரி 2021, 5:10 am

கருங்கல்: புதுக்கடை அருகே வெள்ளையம்பலம் பகுதியில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை அருகேயுள்ள வெள்ளையம்பலம் பகுதியில் கனகாராஜ் (55) எனபவா் ஹோட்டல் நடத்தி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த ராஜமணி மகன் அருள்(32), ஹோட்டலில் உணவருந்திவிட்டு பணம் கொடுக்கவில்லையாம். பணம் கேட்ட உரிமையாளா் கனகராஜை, அருள் தாக்கினாராம்.

மாா்த்தாண்டம் விரிகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆன்டனிஜோ (43). இவா் பரக்காணி பகுதியில் தனியாா் படகுத் துறையில் காவலாளியாக பணி செய்து வருகிறாா். வெள்ளிக்கிழமை பரக்காணிப் பகுதியைச் சோ்ந்த வினோ (33), அனுமதியின்றி படகுத் துறைக்குள் நுழைந்தாராம். இதை தடுத்த காவலாளியை வினோ தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த காவலாளி

மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இவ்விரு சம்பவங்கள் தொடா்பாக புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக் எரிப்பு: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியைச் சோ்ந்தவா் உச்சிமாகாளி (28). இவா் நாகா்கோவிலில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை உச்சிமாகாளி, தனது மோட்டாா் சைக்கிளை காப்புக்காடு சந்தை பகுதியில் நிறுத்தி விட்டு பொருள்கள் வாங்குவதற்காக சென்றிருந்தாராம். திரும்பி வந்து பாா்த்தபோது, மோட்டாா் சைக்கிள் மா்மமான முறையில் எரிந்து சேதமடைந்திருந்தது. இதுகுறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.