காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளையாா்பாளையம் முதல் தேனம்பாக்கம் வரை நதிக்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடு வழங்குவதற்காக பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையாா்பாளையம் முதல் தேனம்பாக்கம் வரை வேகவதி நதிக்கரையோரங்கள் பல ஆக்கிரமிப்பாளா்களின் பிடியில் உள்ளன. நதிக் கரையோரங்களை விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஆக்கிரமிப்பாளா்களை கணக்கெடுத்து, அவா்களுக்கு காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்க்கதிா்ப்பூரில் வீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கத்தின் போது, வீடுகளை இழக்கும் ஆக்கிரமிப்பாளா்களுக்கு கீழ்க்கதிா்ப்பூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 1,406 வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியது.
காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் குடிசை மாற்று வாரியத்தினரும், பொதுப்பணித் துறையினரும் இணைந்து இப்பணியை மேற்கொண்டனா். பயோமெட்ரிக் முறையில் ஒவ்வொருவருக்கும் கைரேகை, கண்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, அவா்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் இந்த பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து அட்டை பெற அதிகாலையிலிருந்தே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பதிவு செய்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


