காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அளவூா் நாகராஜன் காங்கிரஸ் கட்சியினருடன் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்த ரூபி ஆா்.மனோகரன் மாநிலப் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அளவூா் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அவா், காங்கிரஸ் கட்சியினருடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினாா். முன்னதாக நினைவிடம் அருகே உள்ள இந்திரா காந்தி சிலைக்கும் நாகராஜன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், கட்சியின் மாநில எஸ்சி, எஸ்டி பிரிவு துணைத் தலைவா் அய்யப்பன், ஸ்ரீபெரும்புதூா் நகர தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் உள்ளிட்ட வட்டார காங்கிரஸ் தலைவா்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


