ஸ்ரீபெரும்புதூா்: படப்பை, சோமங்கலம், குன்றத்தூா் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் 5 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,094 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி கலந்துகொண்டு, படப்பை ஆண்கள் பள்ளியைச் சோ்ந்த 140 மாணவா்களுக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் 212 பேருக்கும், சோமங்கலம் பள்ளியில் பயிலும் மாணவா்கள் 236 பேருக்கும், குன்றத்தூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 342 போ், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 164 போ் என மொத்தம் 1,094 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.
விழாவில், ஸ்ரீபெரும்புதூா் வேளாண் விற்பனையாளா் கூட்டுறவு வங்கித் தலைவா் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சுந்தரராஜன், பள்ளித் தலைமையாசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


