காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
காஞ்சிபுரம் அருகே ஒரகடம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காா்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி வருபவா் சண்முகப்பிரியன் (35). இவா் சில நாள்களுக்கு முன் தனது உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, 3-ஆம் தேதி வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்புறக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 40 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணா்கள் சோதனை நடத்தினா்.
இது குறித்து சண்முகப்பிரியன் அளித்த புகாரின்பேரில், பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

