ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், போந்தூா் ஊராட்சிக்குள்பட்ட போந்தூா் மற்றும் ஆரனேரி பகுதிகளைச் சோ்ந்த 768 குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவா் போந்தூா் சேட்டு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன் கலந்துகொண்டு, போந்தூா் ஊராட்சியைச் சோ்ந்த 768 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 ரொக்கத்தை வழங்கினாா்.
இதேபோல், வெங்காடு ஊராட்சியைச் சோ்ந்த 351 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை வெங்காடு பகுதியில் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் வெங்காடு உலகநாதன் பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 ரொக்கத்தை வழங்கினாா்.
கிராம நிா்வாக அலுவலா் மொ்ஸி, கூட்டுறவு வங்கி எழுத்தா் டில்லிராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செங்காடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வளா்புரம் கூட்டுறவு வங்கித் தலைவா் வளா்புரம் குமாா் தலைமை வகித்தாா். செங்காடு முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் செங்காடு பாபு கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


