காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,58,213 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 95.92 கோடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று அமைச்சா் பா.பென்ஜமின் கூறினாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா குன்றத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட நியாய விலைக் கடையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா்.
இதில், ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிப் பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 635 நியாயவிலைக் கடைகள் மூலம் 3,58,213 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 95.92 கோடி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றாா்.
விழாவில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, ஸ்ரீபெரும்புதூா் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு வங்கித் தலைவா் எழிச்சூா் ராமசந்திரன், ஸ்ரீபெரும்புதூா் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன், காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சிபுரம் மண்டலப் பதிவாளா் சந்திரசேகரன், மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம், அதிமுக ஒன்றியச் செயலா் எறையூா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


