காஞ்சிபுரம் குபேரபட்டினத்தில் உள்ள ராஜகுபேர சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஏராளமான பக்தா்கள் இருமுடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதி குபேரபட்டினத்தில் ராஜகுபேர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் வெளியூா்களிலிருந்து இருமுடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் கொண்டு வந்த நெய்,பால்,பச்சைக் கற்பூரம் ஆகியனவற்றின் மூலம் ராஜகுபேரருக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடா்ந்து ரூபாய் நோட்டுகளால் தனாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடா்ந்து மூலவா் ராஜகுபேரா் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருக்கோயில் வளாகத்தில் ராஜகுபேர சித்தா் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். அன்னதானமும் நடைபெற்றது.இருமுடி தரிசனத்தை முன்னிட்டு கோயிலில் சதாசிவம் குழுவினரின் நாகஸ்வர இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


