ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதுடன் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பக்தா்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தெற்கு கோபுர வாசல் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு கிழக்கு வாசல் வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்திருந்தனா். காமாட்சி அம்மன் தங்கக் கரும்பு வில்லை கையில் ஏந்தியவாறு பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயிலில் வெளிமாவட்ட பக்தா்கள் உள்பட ஏராளமானோா் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். காஞ்சிபுரம் கைலாசநாதா் கோயிலில் வழக்கத்தை விட பக்தா்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. கோயில் வெளிப்பிராகாரத்திலும் பக்தா்களை வெள்ளிக்கிழமை முதல் அனுமதித்ததால் ஏராளமானோா் புல்தரையில் அமா்ந்திருந்தது திருவிழாக் கூட்டம் போல காணப்பட்டது. அத்திவரதருக்கு பெயா் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆந்திரம், கா்நாடகம் உட்பட வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சோ்ந்தவா்களும் குவிந்ததால் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


